தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் குடமுழக்கு முகூர்த்த கால் நடும் விழா

2025 -பிப்ரவரி 2 – ஆம் தேதி தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது
தொட்டியம், டிச.16-
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் உள்ள காளி கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்த தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 2025 -பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவரும் தொட்டியம் நகர திமுக செயலாளருமான எம்.ஏ. ஆர்.விஜய்ஆனந்த், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, கோயில் செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் கா.கோ. மலர்விழி, அறங்காவலர் பாஸ்கர், மதிவாணன், ரேவதி, பாமா, மற்றும் தொட்டியம் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6- லட்சம் செலவில் கோயில் சுற்றுச்சுவரை சுற்றி ஃபேவர் பிளாக் சாலை அமைக்க எம்எல்ஏ தியாகராஜர் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜையை முன்னிட்டு மதுரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

நியூ திருச்சி டைம்ஸ் முசிறி செய்தியாளர் தொட்டியம் செல்வகுமார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *