நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதன் எதிரொலியாக இரண்டு நாட்கள் வார விடுமுறை கழிந்த பின்னர் இன்று, திங்கட்கிழமை காலையிலேயே உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர்

திருப்பராய்த்துறையில் உள்ள திருமஞ்சனத்துறை பாலத்தில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு வேத லட்சுமி , அந்தநல்லூர் பொறியாளர் திருமதி ஜெயசுதா பாலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். திருப்பராய்த்துறை பஞ்சாயத்து செகரட்டரி திரு சேகர் உடனிருந்து பாலத்தின் நிறைகுறைகளை விளக்கினார்.

பாலத்தின் நிலை பராமரிப்பின்றி சேதம் அடித்து உள்ளது போல் தெரிகிறது என்றும், அதனை சிறு சிறு பராமரிப்பு பணிகள் செய்தாலே பாலம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்றும், மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக *மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

திருப்பராய்த்துறை கிராம பொதுமக்களும், சிவன் அடியார்களும் சமூக ஆர்வலர்களும் நியூ திருச்சி டைம்ஸ்க்கு நன்றிகளை தெரிவித்தனர

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *