குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னக
இரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு மற்றும் கிராம வட்டார மாவட்ட மற்றும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்தும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான கருக்கலைப்பு சிசுக்கொலை பாலியல் வன்முறை குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அரசு நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மிஷன் வாத்சல்யா நிதி ஆதரவுத் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மூவாலூர் இராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்களான குழந்தைகள் உதவி மைய எண் 1098 பள்ளி கல்வித்துறை தொலைபேசி எண் 14417 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 செயல்பாடுகள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
இரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *