ஶ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் இணை ஆணையர் மாற்றம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை தலமாக விளங்குகின்றது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி, சித்திரை தேர், தை கருடன் மாசி கருடன் ஆகியவை ஸ்ரீரங்கம் கோவிலின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும்.

இந்த திருக்கோவிலின் இணை ஆணையராக மாரியப்பன் என்பவர் பணியில் இருந்தார்.

அவர் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இணை ஆணையர் சிவராம் குமார்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

புதிய இணை ஆணையருக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *