தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் மாவட்ட தொண்டர் அணி இணைந்து மாபெரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் சிலம்பம் போட்டி

கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர்

திருவெறும்பூர்: மா27
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது

மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட வழக்கறிஞர்அணி அமைப்பாளர் தினகரன் மற்றும் மாவட்ட தொண்டர்அணி அமைப்பாளர் உதயகுமார்ஆகியோர் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர்அணி மற்றும் மாவட்ட தொண்டர்அணி சார்பில் இணைந்து மார்க்கெட் ஈ பி ரோடு மதுரம் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாபெரும் சிலம்பம்போட்டி நடைபெற்றது
மேலும் இந்த சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இந்த சிலம்பம் போட்டியில் 7வயது முதல் 10 வயது உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 11 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் 15 வயது முதல் 17 வயது குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என சுமார்115 பள்ளி மாணவ மாணவிகள் இந்த சிலம்பம்போட்டியில் கலந்து கொண்டனர்

தனித்தனி சுற்றுகலாக நடை பெற்ற இந்த சிலம்பம்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்

மேலும் இந்த சிலம்பம் போட்டியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பன்னீர்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராஜலிங்கம் மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் ஜெயசித்ரா மற்றும் மாவட்ட தொண்டர் அணி தலைவர் முத்துச்சாமி மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தேவராஜன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்‌

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *