
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள ஊர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவுக்கு திமுக பெரும்பான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலாளர் துபாய் கே. அன்பர் அலி தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் சுபேர்கான் முன்னிலை வகித்தார். திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என் நேரு வழிகாட்டுதல் வழி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,

திருச்சி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை அட்வகேட் ஜென்ரல் பாஸ்கரன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநகராட்சி கோட்டத் தலைவர் துர்கா தேவி, கவுன்சிலர் புஷ்பராஜ், வட்ட செயலாளர் மூவேந்திரன், திருச்சி மத்திய மாவட்ட சிறுபான்மையர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் மார்ட்டின் குழந்தை ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முடிவில் மாநகர அமைப்பாளர் அக்பர் அலி நன்றி உரையாற்றினார் .
