என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ, (DRPU)டி ஆர் பி யு, (ITPA)ஐ டி பி ஏ, சார்பாக நடைபெற்றது .

இதில் மத்திய அரசு 25 .3 .2025 அன்று பாராளுமன்ற மக்களவையில் பென்ஷன் வசதிகள் திருத்த நிதி மசோதாவை 2025 ஐ நிறைவேற்றி உள்ளது. இம்மா அசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 ன் படி அரசாங்க ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி அதன் அடிப்படையில் ஊதிய கமிஷன் பரிந்துரை பழங்களை அமல்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கின்றது. இந்த திருத்தம் மிக பாரபட்சத்துடன் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் விதமாகவும் உள்ளது.

மேலும் இத்திருத்தம் சிசிஎஸ் பென்ஷன் விதிகள் 1.06.1972 முதல் பெண் தேதியிட்டு அமலாக்கப்பட உள்ளதால் எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்கள் அனைத்தும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே சட்ட திருத்தத்தை எதிர்த்தும் ரத்து செய்யக் கூறியும் மத்திய அரசினை கண்டித்து மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி நடைபெற்றது என்று கூறினார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புசி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்தார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *