பொது விளம்பர சுவர் போல பொது பேனர் சுவர் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் கோரிக்கை

சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் கீழே……

அனுப்புனர்

அல்லூர் ஆர் திருவேங்கடம்

1/1Aமேலத்தெரு

அல்லூர் அஞ்சல்

அல்லூர்

திருச்சி மாவட்டம்

9597683714

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் வணக்கம்

கீழ்காணும் கருத்துக்கள் தவறாக இருந்தால் நிராகரிக்கலாம் ஐயா

கருத்துக்கள் திருச்சி மாவட்டம் முழுவதும்
தமிழக அரசுக்கு நன்றி

வாழ்த்து செய்திகள் அறிவிப்புகள் நோட்டீஸ்கள் ஒட்டுவதற்கு

பொதுவான இடத்தை மாநகராட்சி ஒதுக்கியதற்கு மிகுந்த வரவேற்பு பெற்றது மக்கள் மத்தியில்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலங்களில் ப்ளக்ஸ் வைப்பதும் பேனர் வைப்பதும் பதாகைகள் வைப்பதையும் தடுக்க முடியாது

இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த கட்டவுட் பேனர் இதர விளம்பர பதாகைகள் கலாச்சாரம் பெருகி வருகின்ற சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்

ஆனால் அதை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அந்த இடங்களில் நோட்டீஸ் ஒட்டவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பற்கும் பயனளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு அளித்தனர்

ஆனால் பொதுமக்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் முறையாக அதை பயன்படுத்தவில்லை

அதைப்போல் கட்டவுட் பேனர் அனைத்து விதமான விளம்பர பதாகைகள் வைப்பதற்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும்

சாலைகளின் ஓரத்தில் அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும்

மேலும் மாநகராட்சி அனுமதி பெற்ற பிறகுதான் பிளக்ஸ் விளம்பர பதாகைகள் வாழ்த்து பதாகைகள் வைக்க வேண்டும்

மேலும் அந்த குறிப்பிட்ட பதாகைகளில் அனுமதி பெற்று விவரத்தை தெரிவித்திருக்க வேண்டும்

வரும் காலங்களில் இதன் மூலமாக எந்தவித அசம்பாவித செயலும் நடக்காமல் இருக்க எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் ஐயா

மேர்கூறிய கருத்துகள் தவறாக இருந்தால் நிராகரிகலாம் ஐயா

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *