முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

234/234


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினமான இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரோபோடிக்ஸ் கருவிகளை தயாரித்துள்ள மாணவர்களை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவை மாணவர்களுக்கு பரிமாறி, பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும், வணக்கத்திற்குரிய மேயர் திரு.பிரியாராஜன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *