கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?
87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!”

ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என 87 வயது முதியவர் சு.நடராசன் உருக்கமான கோரிக்கை.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.” — திருக்குறள் 391

கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் கடந்த இந்தியாவில், பணம் இல்லாததால் ஒரு குழந்தையின் கல்விக் கனவு கருகினால் — அது ஒரு குடும்பத்தின் தோல்வி அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி! அந்த வலியை 87 வயதில் மீண்டும் சுமந்து நிற்கிறார் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த மூத்த குடிமகன் சு.நடராசன்.

ரூ.8 இல்லாததால் கல்வி பறிபோனது!
“1950-ல் எனது பள்ளிக் கல்வியைத் தொடர வெறும் ரூ.8 கூட என்னிடம் இல்லை. அந்த எட்டு ரூபாய் இல்லாததால் என் கல்விக் கனவு பாதியிலேயே கருகிப்போனது.

இன்று என் வயது 87. நாடு சுதந்திரம் அடைந்து எட்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனால், பணம் இல்லாததால் கல்வி மறுக்கப்படும் நிலை என் மண்ணில் இன்னும் தொடரக்கூடாது. நான் இழந்த கல்வியை என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” என்ற ரத்தக் கண்ணீர் கோரிக்கையுடன் அவர் முறையிட்டுள்ளார்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” — திருக்குறள் 392

வாழ்க்கைக்குக் கண் போன்ற கல்வியை, பணம் இருப்பவர்களுக்கு மட்டும் திறந்து விட்டு, ஏழைகளுக்கு கதவை மூடுவது எந்த சமூக நீதியின் அடையாளம்?

திருப்பராய்த்துறையில் அரசுப் பள்ளிகள் எங்கே?
திருப்பராய்த்துறையில் முறையான அரசு ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை இல்லாததே மக்களின் மிகப்பெரிய குறையாக முன்வைக்கப்படுகிறது.
இதனால், அப்பகுதி குழந்தைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பள்ளி வசதி இல்லாத இடத்தில், கல்வி என்பது யாருக்கு எட்டுகிறது? பணம் உள்ளவர்களுக்கு மட்டுமா? பணம் இல்லாதவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டாமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

“கல்வி… சேவையா? வணிகமா?”
திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வி, ஆன்மிகம், சேவை என்ற உயர்ந்த வார்த்தைகளின் பின்னால் கட்டண வசூல் மற்றும் கல்வி வணிகமயமாக்கல் நடைபெறுகிறதா? என்பதை அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏழை மாணவர்கள், ஆதிதிராவிட மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி வாய்ப்பிலிருந்து விலகும் நிலை இருக்கிறதா என்பதையும் கண்டறிய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கல்விக்கூடத்தின் வாசல் ஏழைக்காக மூடப்பட்டால்… அந்த வாசலின் பெயர் கல்விக்கூடமா?

விதிவிலக்கா? விதிமீறலா?
விவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளி தொடர்பாகவும் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
பள்ளி குருகுல முறையில் இயங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா?
திருப்பராய்த்துறை மற்றும் சுற்றுவட்டார ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது?
விடுதி மாணவர்களுக்கே முன்னுரிமை அல்லது கல்வி என்ற நடைமுறைக்கு உரிய அரசு அனுமதி உள்ளதா?
அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ளூர் ஏழை மாணவர்களின் கல்வி உரிமை உறுதி செய்யப்படுகிறதா?
என ஒவ்வொரு கேள்விக்கும் வெளிப்படையான பதில் தேவைப்படுகிறது.

சிபிஎஸ்இ பள்ளியிலும் கல்வி உரிமை கேள்விக்குறியா?
ராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றனவா? என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது சாதாரண விதிமீறல் அல்ல.

ஏழையின் குழந்தையின் எதிர்காலத்தைப் பறிக்கும் மிகப்பெரிய சமூக அநீதி!
எனவே, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

எலமனூர் பள்ளிக்கு புதிய பெயர்… புதிய பாதை!
சுதந்திரத்திற்கு முன்பே “எலமனூர் லேபர் பள்ளி” என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் ஆதிதிராவிடர் பள்ளியாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் எலமனூர் அரசுப் பள்ளியும் கவனத்திற்கு வந்துள்ளது.பள்ளியின் பெயரில் நீடிக்கும் சாதி அடையாளங்களை அகற்றி, “பள்ளி என்றால் அனைவருக்கும் பள்ளி!” என்ற கொள்கையுடன், அந்தப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதே உண்மையான சமூக நீதி…

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” — திருக்குறள் 972
பிறப்பால் வேறுபாடு இல்லை என வள்ளுவர் சொன்ன மண்ணில், கல்வி வாசலில்கூட வேறுபாடு இருக்கக் கூடாது!

87 வயது முதியவரின் 4 அவசரக் கோரிக்கைகள்!

  1. திருப்பராய்த்துறைக்கு முழுமையான அரசுப் பள்ளிகள்!
    உடனடியாக அரசு ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

2. கட்டண வசூலுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படுகிறதா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.

3. ஏழை மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி!
விவேகானந்தா வித்யாவனம் உயர்நிலைப்பள்ளி மற்றும் தபோவனம் சார்ந்த பள்ளிகளில், சட்டப்படி தகுதியுடைய ஏழை மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

4. உயர்மட்ட விசாரணை!
அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கட்டண வசூல், சேர்க்கை, வகுப்பு நடத்துதல், RTE அமலாக்கம் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

நான் பெறாத கல்வியை… என் ஊர் பெற வேண்டும்!”
87 வயது.வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நிற்கும் ஒருவர் கேட்பது தனக்கான சலுகை அல்ல.

தனக்காக பள்ளி கேட்கவில்லை.
தனது பேரனுக்காக கேட்கவில்லை.
தனது குடும்பத்திற்காக கேட்கவில்லை.
“என் ஊரில் பிறக்கும் எந்த ஒரு ஏழைக் குழந்தையும் பணம் இல்லாததால் கல்வியை இழக்கக் கூடாது ” என்பதையே கேட்கிறார். இதுதான் இந்த மனுவின் மையக் குரல்.

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.” — திருக்குறள் 611

ஒரு தலைமுறை கல்வியை இழந்துவிட்டால், அடுத்த தலைமுறையை காப்பாற்றுவது அரசின் கடமை.
ரூ.8 இல்லாததால் 1950-ல் ஒரு குழந்தையின் கனவு கருகியது. 2026-ல் அதே காரணத்தால் இன்னொரு குழந்தையின் கனவு கருகக்கூடாது!

கல்வி உரிமை… தேசத்தின் உரிமை!
இந்தியாவின் எதிர்காலம் பணக்காரர்களின் குழந்தைகளால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை.
விவசாயியின் மகன், தொழிலாளியின் மகள், ஏழையின் குழந்தை, கிராமத்து மாணவன், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் — இவர்கள்தான் நாளைய இந்தியாவை கட்டமைக்கப் போகிறார்கள்.

அவர்களின் கையில் புத்தகம் இருக்க வேண்டிய நேரத்தில், கட்டணப் பட்டியல் இருந்தால்…
அவர்களின் கண்களில் கனவு இருக்க வேண்டிய நேரத்தில், பணம் செலுத்த முடியாத பயம் இருந்தால்…
அது கல்வித்துறையின் பிரச்சினை மட்டுமல்ல..

தேசத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி!
எனவே, மாண்புமிகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, திருப்பராய்த்துறை மற்றும் சுற்றுவட்டார ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதே 87 வயது சு.நடராசனின் உருக்கமான வேண்டுகோள்.

“கல்வி விற்பனைப் பொருள் அல்ல… கல்வி ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை!”
ரூ.8 இல்லாததால் ஒரு கனவு கருகியது… இனி ஒரு ரூபாய் இல்லாததால் கூட ஒரு குழந்தையின் கனவு கருகக்கூடாது!

இதுதான் உண்மையான சுதந்திரம். இதுதான் சமூக நீதி. இதுதான் தேசப்பற்று!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *