ஸ்ரீரங்கத்தில் தொடரும் குட்கா வேட்டை – ஸ்ரீரங்கம் காவல்துறையினரின் அதிரடி-பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் ஆய்வாளர் திருவானந்தம் அவர்களின் உத்தரவின் பேரில்
உதவி ஆய்வாளர் சுந்தரம் ,தலைமை காவலர் சங்கர்,காவலர்கள் ஜார்ஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை குட்கா விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது

தனிப்படை குழு பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் ,சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்தும் வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் பாலத்திற்கு கீழ் நேரு நகர் அருகில் மர்மநபர்கள் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது

இந்சூழ்நிலையில் சம்பவ இடத்தை காவலர்கள் சுற்றி வளைத்து நோட்டமிட்டு வந்த நிலையில் ஆட்டோவில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது
மேலும் விசாரிக்க

அவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த சரவணண் என்பவரும் ,திருச்சி ராஜா காலனியை சேர்ந்த சபீர் முகமது என்பதும் தெரியவந்தது

திருவானைக்கோவிலில் வீடு வாடகைக்கு எடுத்து குடோன் அமைத்து குட்கா பதுக்கியதும் தெரியவந்தது.

அவரிடம் தீவீர விசாரணை மேற்கண்ட பொழுது 3 நபர்கள் இவ்விஷயத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணண்,சபீர் முகமது என இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து 1.5 இலட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது

மேலும் ஒருவரை வலை வீசீ தேடி வருகின்றனர்

மூன்று நாட்களுக்கு முன்புதான் 38 கிலோ குட்கா சிக்கியது குறிப்பிடதக்கது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *