
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் ஆய்வாளர் திருவானந்தம் அவர்களின் உத்தரவின் பேரில்
உதவி ஆய்வாளர் சுந்தரம் ,தலைமை காவலர் சங்கர்,காவலர்கள் ஜார்ஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை குட்கா விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது
தனிப்படை குழு பல்வேறு இடங்களில் வாகன சோதனையும் ,சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்தும் வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் பாலத்திற்கு கீழ் நேரு நகர் அருகில் மர்மநபர்கள் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது

இந்சூழ்நிலையில் சம்பவ இடத்தை காவலர்கள் சுற்றி வளைத்து நோட்டமிட்டு வந்த நிலையில் ஆட்டோவில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது
மேலும் விசாரிக்க
அவர்கள் ராஜபாளையத்தை சேர்ந்த சரவணண் என்பவரும் ,திருச்சி ராஜா காலனியை சேர்ந்த சபீர் முகமது என்பதும் தெரியவந்தது

திருவானைக்கோவிலில் வீடு வாடகைக்கு எடுத்து குடோன் அமைத்து குட்கா பதுக்கியதும் தெரியவந்தது.
அவரிடம் தீவீர விசாரணை மேற்கண்ட பொழுது 3 நபர்கள் இவ்விஷயத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணண்,சபீர் முகமது என இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து 1.5 இலட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது
மேலும் ஒருவரை வலை வீசீ தேடி வருகின்றனர்
மூன்று நாட்களுக்கு முன்புதான் 38 கிலோ குட்கா சிக்கியது குறிப்பிடதக்கது






