சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்

திருச்சி மாநகரில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். இன்று(11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கை ,கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி ஆதிராஜ் உயிரிழந்தார். ஆதிராஜ் மாநில அளவில் சிறந்த துப்பாக்கி சூடும் முதலிடத்தை தக்க வைத்திருந்தார் எஸ்.எஸ்.ஐ ஆதிராஜ். எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகளை கையாண்டு இலக்கை குறிவைத்து சுடுவதில் வல்லவர்.

இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் பேரிழப்பாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நியூ திருச்சி டைம்ஸ் தன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *