திருச்சி இரண்டாம் தலைநகரம் உள்ளடக்கிய ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி துரை வைகோ எம்பி கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு

இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான மாண்புமிகு கனிமொழி எம்.பி. அவர்களை துரை வைகோ எம்.பி சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதில்,
🔹 திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி TNSTC போக்குவரத்துப் பிரிவு உருவாக்கம்.

🔹 திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவித்தல்.

🔹 திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை அமைப்பதில் முன்னுரிமை.

🔹 திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைத்தல்.

🔹 திருச்சி–மணப்பாறை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் உற்பத்தி மையமாக மேம்படுத்தல்.

🔹 தலைநகர் டெல்லியில், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வரும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழக மாணவ/ மனைவியருக்கு தனி விடுதி அமைத்து தரவும் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கல்
ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இவை மிகவும் அவசியமான திட்டங்கள்.

இந்த கோரிக்கைகளை மாண்புமிகு கனிமொழி MP அவர்கள் கவனமாக கேட்டறிந்து, திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க பரிசீலனை செய்ய உறுதியளித்ததற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார் துரை வைகோ எம்.பி

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    குழந்தை கடத்தல் – தவெக தலைவர் விஜய் கண்டனம்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் பதிவு திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த…

    மனிதம் எனும் புனிதம் போற்றும் துரை வைகோ எம்.பி

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த திரு. தேவராஜ் வேலு அவர்கள் அங்கே திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *