முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

திருச்சி:

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆற்றில் ஆபத்து… உயிருக்கு உத்தரவாதம் இல்லை!
முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஏராளமானோர் குளிக்கவும், சுற்றுலா செல்லவும் வருகின்றனர். இந்நிலையில், ஆற்றில் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு சிலர் நீரில் மூழ்கியும், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

“ஆபத்து வந்தால் ஓட்டம்… அவசரம் என்றால் தாமதம்” என்ற நிலையே இதுவரை இருந்து வந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை… நிலையமே இல்லை!
பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரையிலான பகுதிகளில் தனியான தீயணைப்பு நிலையம் இல்லாததால், அவசர நேரங்களில் அருகிலுள்ள குளித்தலை, முசிறி அல்லது திருச்சி பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வர வேண்டிய சூழல் நிலவி வந்தது.

இதனால், விபத்து நடந்த இடத்தை அடைவதில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதமும் உயிருக்கு விலையாகும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர்.

82 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலையம்!

இந்த நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது செயல்வடிவம் கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186-ல் உள்ள 82 ஏக்கர் அரசாங்கப் புறம்போக்கு நிலத்தில் முக்கொம்பு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைய உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீயணைப்பு நிலையம் முக்கொம்பில் அமைய இருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

“அமைச்சர் என்றாலும்… மக்களின் சேவகர்!”
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால தேவைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் முயற்சியால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஊருக்கே ராஜா ஆனாலும், வீட்டுக்கு புள்ள” என்ற பழமொழியைப் போல, தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தாலும் தனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார் என்ற பாராட்டும் எழுந்துள்ளது.

கோரிக்கை குரல்… இன்று செயல் குரல்!

பல ஆண்டுகளாக ஒலித்த “முக்கொம்பில் தீயணைப்பு நிலையம் வேண்டும்” என்ற கோரிக்கைக்கு தற்போது செயல் வடிவம் கிடைத்துள்ளது.

கோரிக்கை எழுந்தது… குரல் கொடுத்தனர்… காலம் கடந்தது… இப்போது கட்டமைப்பு உருவாகிறது!

முக்கொம்பில் தீயணைப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், முக்கொம்பு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களுக்கும் அவசர காலங்களில் விரைவான தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவை கிடைக்கும் என்பதால், இந்தத் திட்டம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    திருவெறும்பூர் அருகே சமுத்தி குள பாசன விவசாயிகள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு நன்றிகளை தெரிவித்ததோடு விரைவில் சமுதிக்குள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் 214 ஏக்கர் பரப்பளவில் சமுத்தி குளம் உள்ளது இதன் மூலம் 478 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றன. இதில் தனிநபர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் மேலும் அங்கு பிளாட் போட்டு விற்பனை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *