
14.02.26 அன்று எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி சமயபுரம் சாய் ஸ்ரீ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் ஹோட்டல் குரூப் நிறுவனர் மனோகரன் மற்றும் சமயபுரம் shine LIONS கிளப் தலைவர் R.ராஜா அவர்கள் மற்றும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன் VMS சித்தா கிளினிக் டாக்டர் சுதாசினி SRM மெடிக்கல் கல்லூரி உதவி பேராசிரியர் மாலதி மற்றும் அல்ஹசீனா பேஷன் நிறுவனர் ரஃபியா பேகம் நாநீ ஹெர்பல்ஸ் ரஷீதா SR அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர்கள். ஆகியோர்கள் விழாவினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இவ்விழாவில் 70 பெண்கள் பதிவு பெற்று அதில் 51 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட பயிற்சிகள் சானிட்டரி நாப்கின் சோப் தயாரித்தல் மற்றும் ஹேண்ட் மேட் ஜூவல்லர்ஸ் அனைத்தும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களுக்கு புதிய தொழில் முனைவோர் ஆக ஏற்படுத்தி தர இவ் அறக்கட்டளை செயல்பட்டுள்ளது.






