தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திருச்சி ஏ ஆர் பாஷா.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியில் ஒருவராக திகழ்ந்தார். சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள் மிகவும் பிரபலம். இவருடைய அதிரடியான அரசியலுக்காகவும் இவர் செய்யக்கூடிய பொது நலன் சார்ந்த செயல்களுக்காகவும் இவரை பின்பற்றும் இளைஞர்கள் ஏராளம். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவை பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக மாற்றியதில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் செய்யப்பட்ட பொழுது அன்றிலிருந்து தொடங்கிய இவரது வேகம் இன்று வரை எந்த இடத்திலும் தடைபடாமல் விறுவிறுப்பாகவே செயலாற்றிக் கொண்டு இருந்தது.

திருச்சியில் திரும்பிய இடமெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் பிளக்ஸ் பேனர்களும் சுவர் விளம்பரங்களும் இருக்கின்றது என்றால் அதில் ஏ ஆர் பாஷாவின் பங்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

திருச்சி மாவட்டத்தில் பாஜகவில் திமுகவை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு சிலரின் ஏ ஆர் பாஷாவின் குரல் என்றைக்குமே ஓங்கி ஒலிக்கும். இவர் வசிக்கும் பகுதியான தென்னூர் ஏரியாவில் திமுக மிகவும் பலம் வாய்ந்த இடத்தில் இருக்கும் பொழுதும் இவர் சார்ந்த இவருடைய சமூகத்திலேயே இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த பொழுதும் அத்தனையும் தவிடு பொடியாக்கி அவர் சார்ந்த சமூக மக்களிடம் பாஜகவின் மீது அளப்பரிய மதிப்பையும் அன்பையும் உருவாக்கி பல இஸ்லாமிய சகோதரர்களை பாஜகவின் பால் கொண்டு வந்தவர் தான் இந்த ஏ ஆர் பாஷா.

இன்று இவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளதாக நமக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த விலகல் முடிவு நிச்சயமாக தமிழக பாஜகவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *