திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!

மார்ச் 07

திருச்சி

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது.

இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற விவரங்களை அளித்து, `கேப்டன்’ ஆக தங்களைப் பதிவு செய்து கொண்டு. ஒவ்வொரு பயணத்துக்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் பலரும் தங்களை மேற்படி நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக இணைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிப்படி மஞ்சள் நிற நம்பர் போர்டை வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் போர்டு வைக்கும் நடைமுறை தமிழகத்திலேயே இல்லாத நிலையில் திருச்சி நகர் பகுதி முழுவதும் வலம் வரும் ராபிடோ வாகனங்கள் `வெள்ளை நிற’ போர்டுடன் பறக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் இந்த வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கும் புகார்கள் சென்றாலும் பைக் டாக்ஸி வாகனங்களைப் பறிமுதல் செய்யாமல் கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக இயக்குவதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமீபகாலமாக திருச்சியில் `ராபிடோ ஆப்’ மூலமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு இல்லை.

போக்குவரத்து சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் `ராபிடோ’ வாகனங்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *