திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!

மார்ச் 07

திருச்சி

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது.

இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் போன்ற விவரங்களை அளித்து, `கேப்டன்’ ஆக தங்களைப் பதிவு செய்து கொண்டு. ஒவ்வொரு பயணத்துக்கும் குறைந்தபட்சம் 30 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் பலரும் தங்களை மேற்படி நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக இணைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், போக்குவரத்து விதிப்படி மஞ்சள் நிற நம்பர் போர்டை வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் போர்டு வைக்கும் நடைமுறை தமிழகத்திலேயே இல்லாத நிலையில் திருச்சி நகர் பகுதி முழுவதும் வலம் வரும் ராபிடோ வாகனங்கள் `வெள்ளை நிற’ போர்டுடன் பறக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் இந்த வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கும் புகார்கள் சென்றாலும் பைக் டாக்ஸி வாகனங்களைப் பறிமுதல் செய்யாமல் கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக இயக்குவதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமீபகாலமாக திருச்சியில் `ராபிடோ ஆப்’ மூலமாக பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு விபத்துக் காப்பீடு இல்லை.

போக்குவரத்து சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் `ராபிடோ’ வாகனங்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *