செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…
தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….
விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி ….

கரூரில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்காகவும் – அதனை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும் துணிச்சலுடன் களத்திற்கு சென்ற நியுஸ் தமிழ் 24×7 திருச்சி நிருபர் கதிரவன். கரூர் மாவட்டத்தில் வரும் இந்த

குவாரியை திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விதி மீறி நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது

செய்தி சேகரிப்பதை அறிந்து திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நேரில் வந்ததாக தகவல்

50 பேருடன் வந்த பழனியாண்டி நிருபரை பார்த்து ஆவேசமாக சீறியதாக கூறப்படுகிறது .

எம்.எல்.ஏ. ஆவேசம் அடைந்ததால், அந்த கும்பல் நிருபரை தூக்கிச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் தூணான ஊடகத்துறை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வல்லூறு பத்திரிகை குழுமம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு உள்ளான நியுஸ் தமிழ் 24×7 செய்தியாளர் கதிரவன் நம்மோடு இணைந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை வெளி கொண்டு வந்தவர். திருச்சி மாவட்டத்தின் அனுபவம் வாய்ந்த – திறமை மிகுந்த பன்பட்ட ஒரு ஊடகவியலாளர்.
அவர் தாக்கப்பட்டுள்ளது பத்திரிகை துறையையே தாக்கியது போலாகும்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் MLA வாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் – தாக்கப்பட்ட செய்தியாளர் கதிரவன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வல்லூறு பத்திரிகை குழுமம் சார்பாக தமிழக அரசையும் – திருச்சி மாவட்ட நிர்வாகத்தையும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சம்பவத்திற்கு பிறகாவது பத்திரிகையாளர்கள் அணைவரும் வேறுபாடுகளை களைந்து ஒன்றினைந்து இதனை கண்டிப்போம்.
இது போன்ற தாக்குதல் சம்பவங்களை கண்டிக்க தவறினால் இனி நாம் எதிர்காலத்தில் பத்திரிகையாளர் என்று சொல்லி வெளியே நடமாடக்கூட முடியாத நிலை ஏற்படும். எனவே இனிமேலாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க
நமக்கு உயிர் பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்தி ஒன்று கூடுவோம். வாரீர் – வாரீர்.
என்றும் பத்திரிகையாளர்களின் நலனுக்கான பாடுபடும்
வல்லூறு பத்திரிகை குழுமம் – தமிழ்நாடு.
தொடர்புக்கு -9952875881.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    துரை வைகோ தலைமையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

    திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஜி.கார்னர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கவும், உரிய பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து, 16 ஆண்டு காலமாக திருச்சி மக்கள் காத்திருக்கின்றனர். துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *