
ஸ்ரீரங்கம் ஜன 29
தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்றார்

விழா முடிந்த பிறகு மாலை சரியாக 3:30 மணி அளவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை புரிந்தார். அவரையும் அவரது மனைவியையும் ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றனர்.

ரங்கா ரங்கா கோபுரம் வழியாக திருக்கோவிலுக்குள் சென்ற கவர்னர் சுவாமி சன்னதி மற்றும் தாயார் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்தார்.

பிறகு சுமார் 4:20 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சென்றார். அங்கு அவரை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் தலைமை குருக்கள் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதிக்கு சென்று மனமுருக பிரார்த்தனை செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

கோவிலில் இருந்து வெளியில் வந்தவர் பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் கோவில்களில் ஸ்ரீரங்கம் காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது









