தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

ஸ்ரீரங்கம் ஜன 29

தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்றார்

விழா முடிந்த பிறகு மாலை சரியாக 3:30 மணி அளவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை புரிந்தார். அவரையும் அவரது மனைவியையும் ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றனர்.

ரங்கா ரங்கா கோபுரம் வழியாக திருக்கோவிலுக்குள் சென்ற கவர்னர் சுவாமி சன்னதி மற்றும் தாயார் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்தார்.

பிறகு சுமார் 4:20 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியில் வந்த அவர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சென்றார். அங்கு அவரை கோவில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் தலைமை குருக்கள் ஆகியோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதிக்கு சென்று மனமுருக பிரார்த்தனை செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

கோவிலில் இருந்து வெளியில் வந்தவர் பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.

கவர்னர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் கோவில்களில் ஸ்ரீரங்கம் காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *