திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி.

திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன் பெயரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல் துறைக்கு ஒரு மோப்பநாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 21/3/2025ஆம் தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது .

திருச்சி மாநகர காவல் துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgian malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு சிலம்பு என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படை (narcotic drug) பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்களை பதுககி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும் மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்த உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *