திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி.

திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன் பெயரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல் துறைக்கு ஒரு மோப்பநாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 21/3/2025ஆம் தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது .

திருச்சி மாநகர காவல் துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgian malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு சிலம்பு என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படை (narcotic drug) பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்களை பதுககி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும் மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்த உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *