

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி.
திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன் பெயரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல் துறைக்கு ஒரு மோப்பநாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 21/3/2025ஆம் தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது .
திருச்சி மாநகர காவல் துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgian malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு சிலம்பு என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படை (narcotic drug) பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்களை பதுககி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும் மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்த உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.