
அந்தநல்லூர் வருவாய் கிராமம் சர்வே எண் 186ல் காப்புக்காடுகள் இருந்தன. பாதுகாக்கப்பட வேண்டிய, கன்சர்வன்சி பாரஸ்ட் காணாமல் போய்விட்டது. அங்கு காடுகள் இல்லை. பள்ளி, விளையாட்டு மைதானம், விளை நிலங்கள் உள்ளன. இன்றைய தேதியில் அரசாங்க பதிவேட்டின் படி அந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 1927ஆண்டு, வருவாய்த்துறை ஆவணங்களின் படி திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சர்வே எண் 175 & 176/2ல் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சாலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்தநல்லூர் மற்றும் திருப்பராய்த்துறை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 26/01/2026, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சுடுகாட்டையும் காப்புக்காடுகளையும் மீட்டு பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மனு அளித்துள்ளனர்.






