திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்களின் அறிக்கை:

மாண்புமிகு. கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

கிராமங்களில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து 13.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் பின்வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1.அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
2.மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
3.மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
4.மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
5.முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
6.தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
7.தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
8.துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
9.உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி
அன்புடன்..
மு.பரஞ்ஜோதி.MA.BL
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

AIADMK || #EPSfor2026 || #EdappadiPalaniswami || #M_Paranjothi || #அதிமுக || #AIADMKTRICHYNORTH || #AIADMK4TN || #ADMK_TRY

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *