இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது உள்ள நிலையை துரை வைகோ எம்.பி விளக்கினார்.
அதுகுறித்து துரை வைகோ விடம் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக உறுதியளித்தார்.
இதன் பின்னர் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களையும் புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து G Cornerல் உயர்மட்ட சுழல் பாலம் (Elevated Rotary) குறித்தான நடவடிக்கைகள் குறித்து பேசினார் துரை வைகோ எம்.பி. அப்போது அவர் பதிலளிக்கையில், இது குறித்து மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களும் அவருடன் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டு இது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்பதை உறுதி செய்தார்.
மேலும், சஞ்சீவி நகர் மற்றும் Y Junction ஆகிய பகுதிகளில் சுரங்க பாதை ( Vehicular Underpass) அமைப்பது ஏற்கனவே வரைபடம் மற்றும் திட்ட செலவு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் நடைமுறைகளில் முடிவு எட்டபடும் என்பதையும் உறுதி செய்தார்.
G Corner மற்றும் சஞ்சீவி நகர், Y Junction குறித்தான துரை வைகோ வின் கடிதங்களுக்கு எழுதுபூர்வமாக பதிலும் கொடுத்துள்ளார்.
திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என துரை வைகோ எம்.பி உறுதியளித்தார்.
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #GCorner





