G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காண தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி

இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது உள்ள நிலையை துரை வைகோ எம்.பி விளக்கினார்.
அதுகுறித்து துரை வைகோ விடம் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதன் பின்னர் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களையும் புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து G Cornerல் உயர்மட்ட சுழல் பாலம் (Elevated Rotary) குறித்தான நடவடிக்கைகள் குறித்து பேசினார் துரை வைகோ எம்.பி. அப்போது அவர் பதிலளிக்கையில், இது குறித்து மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களும் அவருடன் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டு இது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்பதை உறுதி செய்தார்.

மேலும், சஞ்சீவி நகர் மற்றும் Y Junction ஆகிய பகுதிகளில் சுரங்க பாதை ( Vehicular Underpass) அமைப்பது ஏற்கனவே வரைபடம் மற்றும் திட்ட செலவு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் நடைமுறைகளில் முடிவு எட்டபடும் என்பதையும் உறுதி செய்தார்.

G Corner மற்றும் சஞ்சீவி நகர், Y Junction குறித்தான துரை வைகோ வின் கடிதங்களுக்கு எழுதுபூர்வமாக பதிலும் கொடுத்துள்ளார்.

திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என துரை வைகோ எம்.பி உறுதியளித்தார்.

#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #GCorner

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

    திருச்சி: திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான முக்கொம்பில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், முக்கொம்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அவசரகால பாதுகாப்புக் குறைபாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு…

    லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

    தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *