G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காண தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி

இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது உள்ள நிலையை துரை வைகோ எம்.பி விளக்கினார்.
அதுகுறித்து துரை வைகோ விடம் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதன் பின்னர் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களையும் புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து G Cornerல் உயர்மட்ட சுழல் பாலம் (Elevated Rotary) குறித்தான நடவடிக்கைகள் குறித்து பேசினார் துரை வைகோ எம்.பி. அப்போது அவர் பதிலளிக்கையில், இது குறித்து மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களும் அவருடன் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டு இது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்பதை உறுதி செய்தார்.

மேலும், சஞ்சீவி நகர் மற்றும் Y Junction ஆகிய பகுதிகளில் சுரங்க பாதை ( Vehicular Underpass) அமைப்பது ஏற்கனவே வரைபடம் மற்றும் திட்ட செலவு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் நடைமுறைகளில் முடிவு எட்டபடும் என்பதையும் உறுதி செய்தார்.

G Corner மற்றும் சஞ்சீவி நகர், Y Junction குறித்தான துரை வைகோ வின் கடிதங்களுக்கு எழுதுபூர்வமாக பதிலும் கொடுத்துள்ளார்.

திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என துரை வைகோ எம்.பி உறுதியளித்தார்.

#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #GCorner

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்களின் அறிக்கை:

    மாண்புமிகு. கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கிராமங்களில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து 13.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *