திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் – துரை வைகோMP

திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர இரயில் சேவை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த வலியுறுத்தினேன்.

மேலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியிருந்தேன். அதன் விவரம் பின்வருமாறு:

  • 27.03.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன்.
  • 10.12.2025 அன்று மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
  • 04.02.2026 அன்று அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்.
  • 07.03.2026 அன்று திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்த நீட்டிக்கப்பட்ட புதிய இரயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இதற்காக வேண்டி, மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக இரயில்வே மற்றும் திருச்சி மண்டல இரயில்வே அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
09.05.2026

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

பெண் அதிகாரிக்குக் கூட கழிப்பிட வசதி இல்லாத அவலம்!காகிதத்தில் ‘தூய்மை’… காவிரிக்கரையோரம் ‘அவலம்’!திருப்பராய்த்துறை ஊராட்சியின் போலி விளம்பர முகமூடியைக் கிழிக்கும் பொதுமக்கள்!

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு” என்றார் வள்ளுவர். ஆனால், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை ஊராட்சியிலோ, பேரறிவும் இல்லை; பெருந்தன்மையும் இல்லை; பெயரளவிற்கே நிர்வாகம் நடக்கிறது என்பதற்கு சான்றாக நிற்கிறது அங்குள்ள ஒரு போலி விளம்பரப்…

வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *