யேமன் நாட்டில் தமிழர் மரணம் – துரை வைகோ எம்.பி முயற்சியால் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது

யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கும் பிறகு அவர் 03.04.2026 அன்று உயிரிழந்தார்.

அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக 12.04.2026 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் தடையில்லா சான்று (NOC) வழங்கியுள்ளது. பின்னர், அவரது உடல் விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாக சிக்கல்களால் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் இந்தியா வந்து சேரும் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என துரை வைகோ விடம் தெரிவித்து, மிகுந்த மனவேதனை மற்றும் துயரத்தில் அவரது உடலை கொண்டுவர முறையிட்டனர்.

இந்த தகவலை மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு 04.05.2026 அன்று கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, மறைந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடலை மிக விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ எம்.பி.

அதன் அடிப்படையில் இன்று அவரது உடல் யேமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாக தகவல் தரப்பட்டது. . இன்றே கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அவரது உடல் அனுப்படவுள்ளதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொண்டார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும்

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி,…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *