யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கும் பிறகு அவர் 03.04.2026 அன்று உயிரிழந்தார்.
அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக 12.04.2026 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் தடையில்லா சான்று (NOC) வழங்கியுள்ளது. பின்னர், அவரது உடல் விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாக சிக்கல்களால் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.
இந்நிலையில், அவரது உடல் இந்தியா வந்து சேரும் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என துரை வைகோ விடம் தெரிவித்து, மிகுந்த மனவேதனை மற்றும் துயரத்தில் அவரது உடலை கொண்டுவர முறையிட்டனர்.
இந்த தகவலை மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு 04.05.2026 அன்று கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, மறைந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடலை மிக விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ எம்.பி.
அதன் அடிப்படையில் இன்று அவரது உடல் யேமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாக தகவல் தரப்பட்டது. . இன்றே கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அவரது உடல் அனுப்படவுள்ளதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொண்டார் துரை வைகோ எம்.பி.






