தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி – கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் கன மழையிலும் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மருங்காபுரி வளநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளி மாணவருக்கு விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாவட்ட ஆட்சியரின் இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவருக்கான அனைத்து வகையான மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்று SDPI கட்சி, கல்வியாளர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளி குழந்தைகள் மீது அக்கறை கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • K.அப்துல் அஜீஸ் M.phil.,MSW.,LLB.,
    கல்வியாளர் அணி மாவட்ட தலைவர்
    SDPI கட்சி
    திருச்சி தெற்கு மாவட்டம்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *