தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி – கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் கன மழையிலும் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மருங்காபுரி வளநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளி மாணவருக்கு விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாவட்ட ஆட்சியரின் இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவருக்கான அனைத்து வகையான மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்று SDPI கட்சி, கல்வியாளர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளி குழந்தைகள் மீது அக்கறை கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • K.அப்துல் அஜீஸ் M.phil.,MSW.,LLB.,
    கல்வியாளர் அணி மாவட்ட தலைவர்
    SDPI கட்சி
    திருச்சி தெற்கு மாவட்டம்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *