உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

.

திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

நீர்நிலையில் இருந்து குறைந்தபட்சம் 15 மீட்டருக்குள் எந்த கட்டிடமும் கட்டப்படக்கூடாது என்கின்ற விதியை காற்றில் பறக்க விட்டு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை உடனடியாக நிறுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி , கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதியன்று (30.09.2024) மாவட்ட ஆட்சியரிடம் (TN/WRD/TRY/I/COLLMGDP/30SEP24/10282575) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர் திரு S. கருப்பையா, உறையூர் பகுதி கழகச் செயலாளர் திரு.கல்நாயக் சதீஷ், நிர்வாகிகள் திரு N.S. தருண், திரு கல்லணை M.L.குணா, திரு கைலாஷ் ராகவேந்திரா, 26-வது வட்டக் கழகச் செயலாளர் திரு.சேது கார்த்திக் ஆகியோர் மனு அளித்தனர்.

அதேபோல், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு வரும் இடத்தைப் பற்றி, மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 30.09.2024 அன்று மனு அளிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, நில அளவை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வாயிலாக { கோ.14/உ.பொ ( திருச்சி) /ஆ. பா. பிரிவு/2024/23.10.2024 } வட்டாட்சியர், திருச்சி மேற்கு வட்டம் அவர்களுக்கு படிவம் 1- ல் உரிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்கள் கிடைக்க பெற்றவுடன், உண்மை தன்மையை ஆராய்ந்து, நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்ற விபரம், கடிதம் வாயிலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *