கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் குருபூஜை அன்னதானம்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை சூட்டி மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கேப்டனின் நினைவை போற்றும் விதமாக அவர் பாணியிலேயே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

வட்டக் கழக செயலாளர் சுரேஷ் மணிகண்டன் பகுதி நிர்வாகிகள் அன்பழகன் சசிகுமார் வட்டக் கழக நிர்வாகிகள் ராஜேஷ் இரண்டாவது வட்டக் கழக செயலாளர் ரங்கராஜ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் திரு ஆர் மனோகரன் அவர்கள் இன்று காலை 8 மணி முதல் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட அழகியரெட்டிபட்டி சித்தானந்தம் கரிச்சான்பட்டி தாதம்பட்டி டிஎன்பிஎல் குடியிருப்பு குப்பனார்பட்டி குப்பனார் பட்டி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *