கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் குருபூஜை அன்னதானம்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை சூட்டி மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கேப்டனின் நினைவை போற்றும் விதமாக அவர் பாணியிலேயே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

வட்டக் கழக செயலாளர் சுரேஷ் மணிகண்டன் பகுதி நிர்வாகிகள் அன்பழகன் சசிகுமார் வட்டக் கழக நிர்வாகிகள் ராஜேஷ் இரண்டாவது வட்டக் கழக செயலாளர் ரங்கராஜ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *