
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள்

உயிரிழந்த சிந்துஜா அவர்களின் தாயாரை நேரில் சந்தித்து இந்த தகவல் குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதையும் எடுத்து சொல்லி ஆறுதல் கூறினார்.









