துறையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் 31.12.24 நடைப்பெற்றது. இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா, மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பதன் அவசியம் முக்கியத்துவம் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விவரம் மற்றும் அரசாணை 31 குறித்தும் குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, சட்டவிரோதமாக குழந்தை விற்றல் மற்றும் வாங்குதல் குறித்தும் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழு குழந்தைகள் உதவி மையம் 1098 பணிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். கூட்டத்தில் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *