சினிமா புரட்சியாளர் உணவகத்தி்ல் சுகாதாரக்கேடு- சீல் வைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. மக்கள் புரட்சி புடலங்காய் எல்லாம் திரையில் மட்டும்தானா?

நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது.

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. அங்கு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டிக்கான பகுதிக்கு அருகில் காய்கறி வெட்டுதல், பாக்கெட் போடுதல் போன்ற விஷயங்களை செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

அங்கு கரப்பான் பூச்சி, எலி போன்றவை இருப்பதால் அந்த இடத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உணவு தான் அங்கிருக்கும் பொதுமக்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் செல்வதால் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மன் உணவகத்தை மூடாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சூரியின் அம்மன் உணவகம் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனிநபரின் தூண்டுதல் பேரிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *