சினிமா புரட்சியாளர் உணவகத்தி்ல் சுகாதாரக்கேடு- சீல் வைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. மக்கள் புரட்சி புடலங்காய் எல்லாம் திரையில் மட்டும்தானா?

நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது.

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. அங்கு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டிக்கான பகுதிக்கு அருகில் காய்கறி வெட்டுதல், பாக்கெட் போடுதல் போன்ற விஷயங்களை செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

அங்கு கரப்பான் பூச்சி, எலி போன்றவை இருப்பதால் அந்த இடத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உணவு தான் அங்கிருக்கும் பொதுமக்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் செல்வதால் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மன் உணவகத்தை மூடாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சூரியின் அம்மன் உணவகம் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனிநபரின் தூண்டுதல் பேரிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *