சினிமா புரட்சியாளர் உணவகத்தி்ல் சுகாதாரக்கேடு- சீல் வைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை. மக்கள் புரட்சி புடலங்காய் எல்லாம் திரையில் மட்டும்தானா?

நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தினை மூடச் சொல்லி புகார் எழுந்துள்ளது.

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. அதில் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. அங்கு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டிக்கான பகுதிக்கு அருகில் காய்கறி வெட்டுதல், பாக்கெட் போடுதல் போன்ற விஷயங்களை செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

அங்கு கரப்பான் பூச்சி, எலி போன்றவை இருப்பதால் அந்த இடத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உணவு தான் அங்கிருக்கும் பொதுமக்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் செல்வதால் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மன் உணவகத்தை மூடாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சூரியின் அம்மன் உணவகம் சார்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனிநபரின் தூண்டுதல் பேரிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-

    மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்…

    அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

    திருச்சி கிழக்குத் தொகுதியில்தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம். திருச்சி இ.பி. ரோட்டில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்குத் தொகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது பரப்பரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்புரை மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் தலைமை ஏற்று சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *