தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமரஜென்சியா- TTV தினகரன் கேள்வி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும் மற்ற அணிகளை சேர்ந்தவர்களும் சிறப்புர ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சர்வாதிகாரப் போக்கோடு நடந்து கொள்வதாகவும் இடி அமின் ஹிட்லர் போன்று ஸ்டாலின் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் யார் அந்த சார் என்பது ஒரு மிகப் பெரிய ரகசிய கேள்வியாக உள்ளதாகவும் இந்த விஷயத்திற்காக ஆளும் கட்சி எதற்காக இவ்வளவு பதட்டப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அறுதி பெரும்பான்மை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு அவர் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

முழுமையான பேட்டியை காண எங்கள் youtube சேனல் உடன் இணைந்து இருங்கள்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *