கண் திறந்து பார்க்கிறாள் தேவி மகா மாரியம்மன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தெரு காந்தி சாலை சந்திப்பில் உள்ள மிக சிறிய கோவில் அருள்மிகு மகா சக்தி தேவி மாரியம்மன் திருக்கோவில் ஆகும்.

மிகவும் எளிமையான இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மகா கணபதி மகா சக்தி தேவி மாரியம்மன் காண்பதற்கு நேரில் அமர்ந்து புன்னகையோடு பேசுவது போலவே மிகவும் அற்புதமாக காட்சியளிப்பார்கள்.

இந்த திருக்கோவிலின் பூசாரியான சதீஷ்குமார் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருநாளின் பொழுதும் ஆடி தை வெள்ளிக்கிழமைகளில் பொழுதும் மார்கழி மாதத்தின் பொழுதும் அம்பாளுக்கு மிகவும் சிறப்பாக அற்புதமாக அலங்காரம் செய்து அம்பாளுக்கு நெய்வேத்தியங்களை படைத்து வருகின்றார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் அவர் இருந்தாலும் பக்தியோடும் அணுசரணையோடும் அம்பாளுக்கு அவர் செய்யும் தெய்வீகத் தொண்டில் அன்பர்கள் பக்தர்கள் அனைவரும் கரம் கொடுத்து உதவுவதன் மூலமாக ஒரு சிறிய கோவிலுக்கு நம்மால் இயன்ற பொருள் உதவி தருவதன் மூலமாக அம்பாளின் அருளை பெறுமாறு உங்கள் அனைவரையும் நியூ திருச்சி டைம்ஸ் மனதார வேண்டுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருவெறும்பூர் அருகே சமுத்தி குள பாசன விவசாயிகள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு நன்றிகளை தெரிவித்ததோடு விரைவில் சமுதிக்குள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்

    திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் 214 ஏக்கர் பரப்பளவில் சமுத்தி குளம் உள்ளது இதன் மூலம் 478 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றன. இதில் தனிநபர்கள் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் மேலும் அங்கு பிளாட் போட்டு விற்பனை…

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *