கண் திறந்து பார்க்கிறாள் தேவி மகா மாரியம்மன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தெரு காந்தி சாலை சந்திப்பில் உள்ள மிக சிறிய கோவில் அருள்மிகு மகா சக்தி தேவி மாரியம்மன் திருக்கோவில் ஆகும்.

மிகவும் எளிமையான இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மகா கணபதி மகா சக்தி தேவி மாரியம்மன் காண்பதற்கு நேரில் அமர்ந்து புன்னகையோடு பேசுவது போலவே மிகவும் அற்புதமாக காட்சியளிப்பார்கள்.

இந்த திருக்கோவிலின் பூசாரியான சதீஷ்குமார் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருநாளின் பொழுதும் ஆடி தை வெள்ளிக்கிழமைகளில் பொழுதும் மார்கழி மாதத்தின் பொழுதும் அம்பாளுக்கு மிகவும் சிறப்பாக அற்புதமாக அலங்காரம் செய்து அம்பாளுக்கு நெய்வேத்தியங்களை படைத்து வருகின்றார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் அவர் இருந்தாலும் பக்தியோடும் அணுசரணையோடும் அம்பாளுக்கு அவர் செய்யும் தெய்வீகத் தொண்டில் அன்பர்கள் பக்தர்கள் அனைவரும் கரம் கொடுத்து உதவுவதன் மூலமாக ஒரு சிறிய கோவிலுக்கு நம்மால் இயன்ற பொருள் உதவி தருவதன் மூலமாக அம்பாளின் அருளை பெறுமாறு உங்கள் அனைவரையும் நியூ திருச்சி டைம்ஸ் மனதார வேண்டுகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *