பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு

தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்
ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ் ராஜகண்ணப் பன் அவர்களைப் பற்றி
உண்மைக்கும் புறம்பான செய்திகளை பொது ஊடகங்களிடம் கூறி அமைச்சருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தர முயலும் கைக்கூலி அடிமைகளை வைத்து அக்கப்போர் இயக்கம் நடத்தும் ஜெயராமனையும் அவ்வப்போது நானும் உயிரோடு இருக்கிறேன்
என காண்பிக்கும் பிராடு பாண்டியனை யும் ,கடுமையாக எச்சரிக்கின்றோம்

மேலும் இந்த பொய்யர்களுக்கு துணை போகின்ற டுபாக்கூர் யூடியூப் மற்றும் சேட்டிலைட் ஊடகங்களையும் கடுமையாக கண்டிக்கின்றோம்

தொடர்ந்து பொது மக்களுக்காகவும் அவர்களின் சந்ததிகளின் நலனுக்காகவும் பாடுபட்டு உழைக்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அவர்களின் மனதைக் காயப்படுத்த யாரிடம் கைநீட்டினீர்கள் !? அறப்போர் இயக்கமே

பத்திரிகையாளர்களை சந்திக்கும குற்றச்சாட்டு சொல்லும் விசயம் உண்மையா அல்லது இட்டு கட்டப்படுவதா என்பதை அறிய , காவல்துறை நீதிமன்றம் என முறைப்படி போகாமல் வெற்று பப்ளிசிட்டிக்காக
பத்திரிகை மற்றும்  ஊடகங்களை அழைத்து சீன் போட்டது ஏன் ?

நீங்கள் யார் பேச்சைக் கேட்டு இந்த அவதூறு செயலில் இறங்கினீர்கள்!?

பத்திரிகைகளும் ஊடகங்களும் அமைச்சரின் அல்லது அவரது மகன்களிடம் கருத்து கேட்காமல் செய்தியை வெளியிட்டது தவறு

நிச்சயமாக அத்தனை ஊடகங்களும் சட்டத்திற்கு முன் கைகட்டி நின்றாகவேண்டும் மறந்துவிடாதீர்கள்
ஆவணங்கள் அனைத்தும் பொறுமயாக சரிபார்க்கப்பட்டு முறையாக பத்திரம் செய்யப்பட்டுள்ளது என கூறும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் சட்டம் படித்தவர் உங்களைப்போல் அசடோ கசடோ கிடையாது. எனவே அவர் வைத்துள்ள கெடுவிற்குள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லையெனில் களி திங்க தயாராகுங்கள்

யாதவர் சமுதாயத்தையும், அமைச்சர் திரு. ராஜ கண்ணப்பனையும் அழிக்க ஒழிக்க முயல்வோர் எவராயினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தண்டனையில் இருந்து தப்ப்பிக்கவே முடியாது

இவ்வாறு தமது கண்டன அறிக்கையில் எம்.திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *