துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீருடன் கலந்ததாக ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி கீதாபுரம் குடியிருப்பு வாசிகளிடம் கேட்ட பொழுது கடந்த ஒரு மாதமாகவே குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் அசுத்தமாக வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்படும் போதே இந்த பிரச்சனை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடை நீருடன் நிலத்தடி நீரும் கலந்ததால் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *