துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீருடன் கலந்ததாக ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி கீதாபுரம் குடியிருப்பு வாசிகளிடம் கேட்ட பொழுது கடந்த ஒரு மாதமாகவே குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் அசுத்தமாக வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்படும் போதே இந்த பிரச்சனை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடை நீருடன் நிலத்தடி நீரும் கலந்ததால் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *