சைபர் க்ரைம் குற்றங்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சைபர் க்ரைம் குற்றங்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்
அழகு சுப்பிரமணியன் தலைமையில் 17.02.25 நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் முனைவர் பிரபு சியாமளா பவுலின் சோபியா ராணி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

போதைப்பொருள் குழந்தைகள் பயன்படுத்துவதால் உடல், மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இணைய வழியினால் ஏற்படக்கூடிய சைபர் க்ரைம் குற்றங்கள் குழந்தை நலக்குழுவின் பணிகள் செயல்பாடுகள் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 10 9 8 குறித்தும் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா கல்வியின் அவசியம் குழந்தை திருமண தடுப்பு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லதா பாலின சமத்துவம் குழந்தை உரிமை மனித உரிமையே குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வம் வரவேற்புரை ஆற்றினார் சங்கீதா நன்றி கூறினார் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *