ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது தொடர்பாக BDO அவர்களிடம் புகார் சென்றது. அச்சமயம் வீட்டு பணியை நிறுத்திவிட்டர் BDO அவர்கள். இருவாரம் கழித்து சம்பந்தபட்ட BDO வை சரிகட்டி மீண்டும் வீடு கட்டும் பணியை செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை வட்டாட்சியர்கு தகவல் கொடுத்தும் இதுவரை அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை .

ஆறு, வாய்க்கால், குளம் போன்ற நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசும் , மாண்பமை நீதிமன்றங்களும் பல முறை பல உத்தரவுகள் இட்டும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற வேளையில் தொடர்ச்சியாக சில அரசு அதிகரிகள், ஊழியர்களை கைக்குள் போட்டு கொண்டு இது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாகி வருகிறது.

ஆதலால் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்கள் மேற்கண்ட ஓலையூர் பெரியகுளத்தை ஆய்வு செய்தும், அளவீடு செய்தும் குளத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி குளத்தை மீட்டு தர கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *