திருச்சி மாநகராட்சிக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் வேண்டுகோள்…


திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை முகச் சுழித்து கழிவுநீரை மிதித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இங்கு சாப்பிட வரும் மக்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீர் செய்ய உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக வழிமுறைகளை எடுக்க வேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்.

இது போன்று ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட காரணம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் அல்ல – பொதுமக்களாகிய நாமும் தான் பாதாள சாக்கடையில் நாம் கழிவு நீரைத்தவிர பிளாஸ்டிக் குப்பைகள் – மீதி உள்ள உணவு பொருட்களையும் இதில் கலந்து கொட்டி வருவதும் – அது அந்தந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு வெளியே வழிந்து மக்களுக்கு தொல்லை கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே நாமும் இது போன்ற செயல்களை நிறுத்தி நம்பகுதி தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு கொடுப்போம்.


என்றும் பொது நலச் சேவையில் – ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம். பொது நலன் கருதி – TV Koil – கொண்டையன்பேட்டை – K.பன்னீர்செல்வம் – துணைத்தலைவர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *