திருச்சி மாநகராட்சிக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் வேண்டுகோள்…


திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை முகச் சுழித்து கழிவுநீரை மிதித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இங்கு சாப்பிட வரும் மக்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீர் செய்ய உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக வழிமுறைகளை எடுக்க வேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்.

இது போன்று ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட காரணம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் அல்ல – பொதுமக்களாகிய நாமும் தான் பாதாள சாக்கடையில் நாம் கழிவு நீரைத்தவிர பிளாஸ்டிக் குப்பைகள் – மீதி உள்ள உணவு பொருட்களையும் இதில் கலந்து கொட்டி வருவதும் – அது அந்தந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு வெளியே வழிந்து மக்களுக்கு தொல்லை கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே நாமும் இது போன்ற செயல்களை நிறுத்தி நம்பகுதி தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு கொடுப்போம்.


என்றும் பொது நலச் சேவையில் – ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம். பொது நலன் கருதி – TV Koil – கொண்டையன்பேட்டை – K.பன்னீர்செல்வம் – துணைத்தலைவர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *