திருச்சி மாநகராட்சிக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் வேண்டுகோள்…


திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை முகச் சுழித்து கழிவுநீரை மிதித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இங்கு சாப்பிட வரும் மக்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீர் செய்ய உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக வழிமுறைகளை எடுக்க வேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்.

இது போன்று ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட காரணம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் அல்ல – பொதுமக்களாகிய நாமும் தான் பாதாள சாக்கடையில் நாம் கழிவு நீரைத்தவிர பிளாஸ்டிக் குப்பைகள் – மீதி உள்ள உணவு பொருட்களையும் இதில் கலந்து கொட்டி வருவதும் – அது அந்தந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு வெளியே வழிந்து மக்களுக்கு தொல்லை கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே நாமும் இது போன்ற செயல்களை நிறுத்தி நம்பகுதி தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு கொடுப்போம்.


என்றும் பொது நலச் சேவையில் – ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம். பொது நலன் கருதி – TV Koil – கொண்டையன்பேட்டை – K.பன்னீர்செல்வம் – துணைத்தலைவர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *