பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சியில் வருகிற ஜூலை 13ந்தேதி சமுதாய மாநாடுஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, மார்ச். 25 –

ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.
திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அனைத்து வேளாளர் உட்பிரிவு சங்கத்தை சேர்த்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:-
மத்திய அரசு எடுக்கும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் (வெள்ளாளர்) என்ற ஒரே பெயரின் கீழ் பதிவு செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை தீர்மானிக்கப்படுகிறது.
அரசாங்க கெசட்டில் தற்பொழுது தனி தனியாக பதிவு செய்யப்பட்டுள்ள வேளாளர் உட்பிரிவுகளை, வேளாளர் (வெள்ளாளர்) என்ற பொது பெயரின் மாற்றி அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது. வேளாளர்களுக்கு என்று தனி வேளாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. நமது கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகளிடம் வலியுறுத்த வருகிற ஜூலை 13. ந்தேதி அன்று அரசியல் சார்பற்ற வேளாளர் (வெள்ளாளர்) சமுதாய மாநாடு நடத்தவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மாநாட்டில் அனைத்து வேளாளர் (வெள்ளாளர்) உட்பிரிவு சங்ங்களும் அமைப்புகளும் அரசியல் சார்பற்று கலத்து கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள மண்டல வாரியாக சங்கஙகள்,
அமைப்புகள் பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கொண்டு மத்திய ,மாநில அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லவும், அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தவும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில ஒருங்கிணைந்த வேளாளர்,
வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்பாகவே தொடர்ந்து இயங்கும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *