திருச்சி பஜாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பாதையாக பயன்படுத்தும் தனியார் வணிக நிறுவனம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம், நகரளவை வார்டு N, பிளாக் 33, நகரளவை எண் 209/1,2 கட்டுப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு அத்துமீறி அரசு நிலத்தின் வழியாக எந்த வித உத்தரவும் பெறாமல் பொதுப் பாதையாக தனியார் வணிக நிறுவனத்தினர் பயன்படுத்திக் வருகின்றனர்.

மேற்படி நகர அளவை சர்வே எண்களில் அமைந்திருந்த வட்டாட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டு நிலையில் அருங்காட்சியகம் மட்டும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.

அரசு நிலத்தை சுற்றி வணிக நிறுவனங்கள் உரிய கட்டிட அனுமதிக்கு மாறுதலாகவும் மற்றும் முறைகேடாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டிடங்கள் கட்டி வருகின்றன.

பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு தனியார் வணிக நிறுவனம் அரசு நிலத்தின் வழியாக அத்துமீறி நுழைந்து பொதுப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட செயற்பொறியாளரும் மற்றும் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளரின் நேரடி மேற்பார்வையில் நில அளவை நகர சார் ஆய்வாளரை கொண்டு அரசு நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் பொது பாதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன் மலைக்கோட்டை பகுதி பாஜக அப்போதைய மண்டல் தலைவர் அரவிந்த் பிரகாஷ் தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *