திருச்சி பஜாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பாதையாக பயன்படுத்தும் தனியார் வணிக நிறுவனம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம், நகரளவை வார்டு N, பிளாக் 33, நகரளவை எண் 209/1,2 கட்டுப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு அத்துமீறி அரசு நிலத்தின் வழியாக எந்த வித உத்தரவும் பெறாமல் பொதுப் பாதையாக தனியார் வணிக நிறுவனத்தினர் பயன்படுத்திக் வருகின்றனர்.

மேற்படி நகர அளவை சர்வே எண்களில் அமைந்திருந்த வட்டாட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டு நிலையில் அருங்காட்சியகம் மட்டும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.

அரசு நிலத்தை சுற்றி வணிக நிறுவனங்கள் உரிய கட்டிட அனுமதிக்கு மாறுதலாகவும் மற்றும் முறைகேடாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டிடங்கள் கட்டி வருகின்றன.

பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு தனியார் வணிக நிறுவனம் அரசு நிலத்தின் வழியாக அத்துமீறி நுழைந்து பொதுப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட செயற்பொறியாளரும் மற்றும் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளரின் நேரடி மேற்பார்வையில் நில அளவை நகர சார் ஆய்வாளரை கொண்டு அரசு நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் பொது பாதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன் மலைக்கோட்டை பகுதி பாஜக அப்போதைய மண்டல் தலைவர் அரவிந்த் பிரகாஷ் தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *