திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமா்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.இந்தநிலையில், முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலை 7.10 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய பகுதிகளில் தேர் சுற்றி வந்து காலை 10.30 மணிக்கு நிலை நிறுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்து திருவிழாவை சிறப்பித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *