மயானத்தை, 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க திருச்சி கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186 / 2A1,3ல் 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மற்றும் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் மயானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் , சாலை, சர்வே எண் 175 & 176/2ல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாயானத்துடன் அரசாங்க இடங்களை மீட்டு,
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ,
வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை,
எலமனூர் மக்களுக்கு காவிரி ஆற்றிற்கு போவதற்கான பாதை,
கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம்,
ஊராட்சி அலுவலகம்
போன்றவை அமைத்து பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19/01/2025 நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!

    திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை…

    சௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழா

    திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற மகளீர்களுக்கு சமையல் போட்டி, கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணாகர்களுக்கு நடைபெற்ற ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று 22.02.2026 மாலை 6:30 மணியளவில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *