
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186 / 2A1,3ல் 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மற்றும் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் மயானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் , சாலை, சர்வே எண் 175 & 176/2ல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாயானத்துடன் அரசாங்க இடங்களை மீட்டு,
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ,
வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை,
எலமனூர் மக்களுக்கு காவிரி ஆற்றிற்கு போவதற்கான பாதை,
கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம்,
ஊராட்சி அலுவலகம்
போன்றவை அமைத்து பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19/01/2025 நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.






