
மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமலை தெற்கு எதுமலை கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து பல அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று காலை திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்த சிறுகனூர் காவல் நிலைய காவலர்கள் வந்து பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் பேசுகிறோம் கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதன் பேரில் கலைந்து சென்றனர்.

இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகம் நடைபெறாவிட்டால் பொதுவான இடத்திலே அனைத்து பேருந்துகளையும் மறிப்போம் என்று பொதுமக்கள் முடிவு எடுத்து கலைந்து சென்றனர்.









