துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற துரை வைகோMP முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டதற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த சாலை சந்திப்பில் (Road Junction) அதிக வாகன போக்குவரத்து நிலவி வரும் நிலையில் விபத்துகளை தவிர்க்க, 10.10.2025 அன்று நடைபெற்ற Airport Advisory Committee கூட்டத்தில் Airports Authority of India (AAI) இந்த கோரிக்கையை துரை வைகோவிடம் வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, 12.10.2025 அன்று எழுத்துப் பூர்வமாகவும், 13.10.2025 அன்று நடைபெற்ற DISHA மற்றும் Road Safety Meeting-களிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து, உடனடி தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார் துரை வைகோ MP.

அதனைத் தொடர்ந்து, 17.01.2026 அன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அளித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த இடத்தில் Traffic Signal அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார் துரை வைகோ.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயணம் செய்ய இந்த Traffic Signal பெரிதும் உதவும். விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் எடுத்த இந்த நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த முக்கியமான முன்னேற்றமாகும்.

மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, துறைகள் ஒருங்கிணைந்து விரைவான நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ MP..

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோ

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி, நாவல்பட்டு அண்ணா நகரில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள், மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் பர்கி அணை நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிக் கொண்ட செய்தி அறிந்து கவலையும் வருத்தமும்…

மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கை

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததுடன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *