துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற துரை வைகோMP முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டதற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த சாலை சந்திப்பில் (Road Junction) அதிக வாகன போக்குவரத்து நிலவி வரும் நிலையில் விபத்துகளை தவிர்க்க, 10.10.2025 அன்று நடைபெற்ற Airport Advisory Committee கூட்டத்தில் Airports Authority of India (AAI) இந்த கோரிக்கையை துரை வைகோவிடம் வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, 12.10.2025 அன்று எழுத்துப் பூர்வமாகவும், 13.10.2025 அன்று நடைபெற்ற DISHA மற்றும் Road Safety Meeting-களிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து, உடனடி தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார் துரை வைகோ MP.

அதனைத் தொடர்ந்து, 17.01.2026 அன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அளித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த இடத்தில் Traffic Signal அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார் துரை வைகோ.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயணம் செய்ய இந்த Traffic Signal பெரிதும் உதவும். விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் எடுத்த இந்த நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த முக்கியமான முன்னேற்றமாகும்.

மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, துறைகள் ஒருங்கிணைந்து விரைவான நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ MP..

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *