இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசிய கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தினந்தோறும் கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை வெளியே நிற்க வைத்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தக்கூடிய ஓபன் டாப் அணியக்கூடாது அம்பர்லா டாப் மட்டுமே அணிய வேண்டும் அப்பொழுது தான் உனக்கு பாதுகாப்பு என்றும் இல்லையென்றால் மாணவர்கள் உங்களை கேலி செய்வார்கள் என்றும் பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடக்காது என்றும்
“உன் ஆடை சரியாக இல்லை”, “நீ ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கிறாயா?”, “யாருடன் போயிட்டு வருகிறாய்?”, “நீ கல்லூரிக்கு வந்திருக்கிறாயா அல்லது ஷாப்பிங் வந்திருக்கிறாயா?”
என இழிவாகவும் அவமதிப்பாகவும் பேசும் செயல்களில் முதல்வர் சத்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனை கண்டித்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டம், இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் வைரவளவன் மாவட்டச் செயலாளர் ஆமோஸ், கல்லூரி கிளைச் செயலாளர் துளசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    அரசியல் வானில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் – சின்னப்பசங்க இல்லை சாதனைப்பசங்க இவர்கள்

    அரசியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் ஏனோ அரசியல் தலைவர்கள் மீது அவ்வளவாக என்றைக்குமே இருந்ததில்லை. இதுநாள் வரை மிகப்பெரிய மதிப்பு அல்லது ஒரு பற்றுதல் வந்தது கிடையாது. ஒரு ஊடகவியலாளராக அரசியலை ஊடக பார்வையோடு தான் இது வரை பார்த்திருக்கின்றேன். எந்த…

    அமைச்சர் ரமேஷின் அதிரடி வேட்டை ஆரம்பம் – ஆட்டம் காணும் அதிகார வர்க்கங்கள்

    சாணக்கிய சக்கர வியூகத்தில் அறநிலையத்துறை அமைச்சர்! ஆட்டம் காணும் அதிகாரவர்க்கம்!“புலி எட்டடி பாய்ந்தால், குட்டி புலி பதினாறு அடி பாய்ந்திருக்கிறது!” அறநிலையத்துறை திருச்சி மண்டலத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பிரம்மாண்ட ‘யுத்தம்’ அரங்கேறி முடிந்துள்ளது. கோவில் சொத்துக்களைச் சூறையாடிய தில்லாலங்கடிகளுக்குச் சிம்மசொப்பனமாக,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *