எம் எல் ஏ அலுவலகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன்.

் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவரோடு பத்திரிக்கையாளர்கள் என்றென்றும் அன்போடும் மதிப்போடும் பழகி வந்தனர்.

இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு கதிரவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற பத்திரிக்கையாளர்களை பல மணி நேரங்களுக்கு உச்சி வெயிலில் நிற்க வைத்து அவர்களை கதிரவன் அவர்கள் சந்திக்க இயலாதபடி அங்கிருந்த அவருடைய உதவியாளர்கள் நடந்து கொண்டதாகவும் மேலும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாகவும் நம்மிடையே சக பத்திரிகையாளர்கள் மிகவும் வருத்தத்துடன் கூறினர்.

கதிரவன் அவர்களின் உதவியாளர்களின் இந்த செயல் திரு கதிரவன் அவர்களின் கவனத்திற்கு சென்றதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக சென்ற எங்களை அவருடைய உதவியாளர்கள் இப்படி இழிவு படுத்தியது எங்களை மனதளவில் மிகவும் காயப்படுத்தி விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *