
தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் முன்னாள் டிஜிபி R.நடராஜ் IPS
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகரும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் காவல்துறை தலைவருமான R.நட்ராஜ் IPS
விரைவில் தமிழக வெற்றி கரகத்தின் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்..

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா வின் விசுவாசியாக அறியப்பட்டவர்.
ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அலுவலரான இவர் (IPS). தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் தலைவராகவும், தமிழ்நாடு காவல்துறை தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்புற செயலாற்றி தன்னுடைய அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான பொதுச் செவை மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். . இவர் 1975ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு மத்திய மற்றும் மாநிலப் பணிகளில் பல்வேறு நிலைகளில் சேவை புரிந்துள்ளார்.

வழக்கறிஞர், அரசியல்வாதி, எழுத்தாளர்,சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்ட R நட்ராஜ் IPS அவர்கள்
அ இ அ தி மு க வில் நிலவில் உட்கட்சி பூசல்களால் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் தனது ஆதாரவாளர்களுடன் இணைய உள்ளதாக தகவல்..






