ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்

ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட சென்று தரிசித்து விடலாம் ஆனால் தாலுகா அலுவலகத்தை கண்டுபிடித்து தங்கள் பணிகளை முடிப்பது என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் குதிரைக்கொம்பு ஆகும்

தாலுக்கா அலுவலகம் இருக்கும் இடத்தை வழி காட்டுவதற்கு முறையான பெயர் பலகைகளோ அடையாளங்களோ இல்லாமல் ஒரு ஓரத்தில் தாலுக்கா அலுவலகம் செயல்பட்டு வருகின்றது அந்த அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்லும் பயனாளர்கள் நிற்பதற்கு நிழற்டையோ அல்லது அவர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகளோ எதுவுமே கிடையாது அது மட்டுமல்ல அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க செல்வதென்றால் கூட அவர்களுக்கு கழிப்பிட வசதிகள் கூட அங்கு கிடையாது

இதற்கு மேலாக இந்த அலுவலகத்தை நோக்கி வரும் கிராமப்புற பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்பதற்கு நிழற்குடை கூட கிடையாது

இப்படி இல்லை இல்லை இல்லை என்பதே இந்த திராவிட மாடல் அரசுகளின் சாதனையாக இதனால் வரை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தூய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் அதிரடி விசிட் செய்து நடவடிக்கைகள் எடுப்பது போலவே ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கும் அவர் அதிரடியாக விசிட் செய்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது களம் இறங்குவாரா ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    ஏழையின் வீட்டை இடிக்க தெரியும்… சாலை போட தெரியாதா?”மனமில்லாத அதிகாரிகளால் தொடரும் அகால மரணங்கள்திருச்சி – கரூர் NH-81 தேசிய நெடுஞ்சாலையின் அநியாய முகம்!

    “ஏழைக்கு ஒரு நீதி… பணக்காரனுக்கு ஒரு நீதி” என்ற பழமொழி புத்தகத்தில் மட்டும் இல்லை; திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை NH-81-ல் அது உயிரோடு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்கள். திருப்பராய்த்துறை சிவன் கோயில் அருகே வாழ்ந்த…

    ஆக்கிரமிப்புக்கு ‘ஆப்பு’.. திருப்பராய்த்துறையில் சுரங்கப்பாதை.. ‘ ராக்கெட் வேகத்தில்’ அதிரடி காட்டும் அதிகாரிகள்!

    மரணப்பொறிக்கு ‘மங்களம்’… மலர்கிறது புதிய ‘மாதிரி’ நெடுஞ்சாலை! -NH81 திருச்சி | சிறப்புச் செய்திஒரு சாலையின் தரம் என்பது வெறும் தார்ச் சாலையில் இல்லை; அதில் பயணிக்கும் ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் இருக்கிறது. இத்தனை காலமும் குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *