திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கைகளை முன் வைத்த துரை வைகோ எம்.பி

இன்று (29.05.2026) மாலை 4.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்தேன்.

முதலில், எனது நீண்டநாள் கோரிக்கைகளான திருச்சி – சார்லப்பள்ளி ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்றியதற்கும், திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர ரயில் சேவையை அறிமுகப்படுத்தியதற்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும், திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

மேலும், கடந்த சந்திப்பின்போது திருச்சி – மயிலாடுதுறை MEMU ரயிலுக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குவது சாத்தியமான கோரிக்கை என்றும், அதனை சாதகமாக பரிசீலிக்கலாம் என்றும் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்திருந்ததை நினைவூட்டி, அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். இதுகுறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சரிடமும் தனியாக கோரிக்கை அளித்திருப்பதாக தெரிவித்தேன்.

இச்சந்திப்பின்போது புதிய கோரிக்கைகளாக, திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புதிய ஷட்டில் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது, தேஜஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22672) மற்றும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (16615) ரயில்களில் திருச்சிக்கு கூடுதல் பயணிகள் ஒதுக்கீடு (Quota) வழங்குவது தொடர்பாக வலியுறுத்தினேன்.

அதேபோல், திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் (Coach Indication Boards) அமைத்தல், 8 வது நடைமேடையில் குடிநீர் வசதியை மீண்டும் செயல்படுத்துதல் மற்றும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் எஸ்கலேட்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்தேன்.

எனது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் எஸ்கேலேட்டர் பணிகள் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் 8வது நடைமேடையில் விரைவில் குடிநீர் வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் பெட்டி நிலை குறியீட்டு பலகைகள் (Coach Indication Boards) முழுமையாக சரி செய்யப்பட்டு வருகின்ற ஜூலை இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற தொடர்ந்து பாடுபடுவேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
29.05.2026

#MDMK #trichy #DuraiVaiko #SouthernRailways

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

    🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. 📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம். ⚠️ முக்கிய…

    புதிய இரயில்வே சேவைகள் வேண்டி துரை வைகோ எம்.பி கோரிக்கை

    மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று (27.05.2026) நேரில் சந்தித்தேன். முதலில் நன்றி தெரிவித்தல்: திருச்சி – திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *