புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம்.

⚠️ முக்கிய பிரச்சனைகள்:
❌ போதுமான இருசக்கர / நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை
❌ Entry Fee / Vehicle Fee குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் இல்லை
❌ குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை
❌ சாலையோர வாகன நிறுத்தத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்
❌ புளியஞ்சோலை ஆற்றுக்கு சென்று வர சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை
❌ பேவர் பிளாக் பாதைகள் ரோட்டு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

📌 2023-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.

🛑 எனவே, இன்று (29-05-2026) நடைபெற உள்ள குத்தகை ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, முதலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மட்டுமே ஏலத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🙏 தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

📢 கோரிக்கை வைக்கும் குழுக்கள்:
🔹 புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டு குழு
🔹 சாலை பயனீட்டாளர்கள் நல குழு – திருச்சி

புளியஞ்சோலை #Puliyancholai #திருச்சி #TamilNadu #Tourism #PublicIssue #ParkingFacility #EntryFee #சுற்றுலாமேம்பாட்டுகுழு #சாலைபயனீட்டாளர்கள்நல_குழு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புதிய இரயில்வே சேவைகள் வேண்டி துரை வைகோ எம்.பி கோரிக்கை

    மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று (27.05.2026) நேரில் சந்தித்தேன். முதலில் நன்றி தெரிவித்தல்: திருச்சி – திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி,…

    ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்

    ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *