புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம்.

⚠️ முக்கிய பிரச்சனைகள்:
❌ போதுமான இருசக்கர / நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை
❌ Entry Fee / Vehicle Fee குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் இல்லை
❌ குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை
❌ சாலையோர வாகன நிறுத்தத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்
❌ புளியஞ்சோலை ஆற்றுக்கு சென்று வர சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை
❌ பேவர் பிளாக் பாதைகள் ரோட்டு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

📌 2023-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.

🛑 எனவே, இன்று (29-05-2026) நடைபெற உள்ள குத்தகை ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, முதலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மட்டுமே ஏலத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🙏 தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

📢 கோரிக்கை வைக்கும் குழுக்கள்:
🔹 புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டு குழு
🔹 சாலை பயனீட்டாளர்கள் நல குழு – திருச்சி

புளியஞ்சோலை #Puliyancholai #திருச்சி #TamilNadu #Tourism #PublicIssue #ParkingFacility #EntryFee #சுற்றுலாமேம்பாட்டுகுழு #சாலைபயனீட்டாளர்கள்நல_குழு

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்

    அமரர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *