🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.
📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம்.
⚠️ முக்கிய பிரச்சனைகள்:
❌ போதுமான இருசக்கர / நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லை
❌ Entry Fee / Vehicle Fee குறித்த தெளிவான அறிவிப்பு பலகைகள் இல்லை
❌ குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை
❌ சாலையோர வாகன நிறுத்தத்தால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்
❌ புளியஞ்சோலை ஆற்றுக்கு சென்று வர சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை
❌ பேவர் பிளாக் பாதைகள் ரோட்டு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
📌 2023-ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிலையான தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.
🛑 எனவே, இன்று (29-05-2026) நடைபெற உள்ள குத்தகை ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, முதலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட பின் மட்டுமே ஏலத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🙏 தமிழ்நாடு அரசு, திருச்சி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
📢 கோரிக்கை வைக்கும் குழுக்கள்:
🔹 புளியஞ்சோலை சுற்றுலா மேம்பாட்டு குழு
🔹 சாலை பயனீட்டாளர்கள் நல குழு – திருச்சி





